Saturday, November 13, 2010

முயற்சியின் முன்னுரை.....


முதல் பக்கத்தின்
முன்னுரை இன்றி
ஒரு கதையோ....காவியமோ
என்றுமே தொடங்குவதில்லை......


ஒரு நீண்ட கதையோ......
ஒரு நெடுங்காவியமோ......
முன்னுரையின் மொழிகள் கற்பிக்கின்றன‌
தொடரப் போகும் படைப்பின் ஆக்கத்தை......


முயற்சியின்றி இங்கு
எவையுமே தொடங்குவதில்லை........
உங்கள் வாழ்க்கையோ...,வெற்றியோ....
உங்கள் காதலோ.....,கவிதையோ....

காற்றை உள்ளிழுக்கும்
உங்கள் முதல் முயற்சியோடு
தொடங்குகிறது உங்கள் வாழ்க்கை.......
உட்காரவும்.......,நடக்கவும்.....
பேசவும்........,உண்ணவும்..........
நினைவுகளே இல்லாத
உங்கள் மழலை நாட்களிலே
முளைத்து விடுகின்றன‌
உங்கள் வாழ்க்கைகான முயற்சிகள்..........


முயற்சியற்று இங்கு
எவையுமே தொடங்குவதில்லை.....
சில நேரம் அவை உங்களால் அறியப்பட்டு......
சில நேரம் உங்களை அறியாமலே......

உங்கள் கனவுகளின் வானவில்
வண்ணங்களற்று கருப்பு வெள்ளையாக
துவங்கும் பொழுதே.........
அவற்றிற்கு வண்ணங்கள் சேர்ப்பவை
உங்கள் முயற்சிகள் தான............


தோல்விகள் சில நேரம்
உங்கள் கை வரக் கூடும்........
வீழ்ச்சியின் வழிகளை சில நேரம்
நீங்கள் காண கூடும்......

ஆனால் ......
இழப்பதறகு இங்கு
எப்பொழுதுமே ஒன்றும் இல்லை......
முயல்வதற்கோ.........
இந்த உலகமே உங்கள் கைகளில்.......


மிகப் பெரிய கனவுகளோ......
மிகச் சரியான வெற்றிகளோ.....
மிகச் சிறந்த வாழ்க்கைகளோ......
இங்கு முயற்சியின் முகவரிகள் இன்றி
தங்களை விலாசப்படுத்திக் கொள்வதில்லை.....


முயற்சிகள் மனிதனின்
தனி உடைமைகள் அல்ல..........
எங்கெல்லாம்
ஒரு உயிரின் சாயை தெரிகிறதோ
அங்கெல்லாம் இருக்கின்றன முயற்சிகள்....
அவை விலங்குகளோ....விதைகளோ......
வித்தியாசங்கள் அறிவதில்லை அவை......


துன்பத்தின் நிழல்கள்
உங்களை சூழும் போதெல்லாம்
நீங்கள் நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்...

"முயன்றால் இங்கு இயலாதது எதுவுமே இல்லை"
என்பதை.........

உங்கள் வாழ்க்கையின்
அழகான பக்கங்கள்
இனியெங்கிலும்
இனிமையாய் நிரம்பட்டும்...
உங்கள் முயற்சியின் முன்னுரையோடு....

இர.குமார்.

No comments: