Saturday, June 14, 2008

அழகாய் ஒரு உலகம்

அருகம்புல்லில் அழகாய்
சில பனித்துளிகள் அதிகாலையில்.....................

சிலிர்ப்பாய் என் மேல்
சிலகாலை நேரத்து சாரல்கள்...........

படபடப்பாய் சில வண்ணத்துப்பூச்சிகள்
என் வழியில்........

வழிமறித்து நின்ற
என்னை வருடியே
சென்றன சிறகடிப்போடு..........

வானத்தில் சில நிறக்கோடுகள்
வானவில் ஜாலங்கள்
எங்கும் வண்ணம் நிரம்பி........

பூக்கள் சில
என்னை நோக்கி
மணத்தோடு நகைத்தன......

வண்டுகள் சில
காதில் இசைத்தன........

மூங்கில் காடுகள்
காற்றில் கீதம் இசைத்தன........

மரங்கள் பசுமையாய்
அருகேஅழைத்தன......

காற்றின் இதமான வருடலோடு
மனம் இரம்மியமானது.......

அழகாய் தான்
இருக்கிறது உலகம்.........

மனம் எங்கும்
ரசனையை தூவி
விழி விரித்து
இதயம் திறந்து
பார்க்கும் போதெல்லாம்...............


இர.குமார்.


நாங்கள் தமிழர்கள்-உரக்க சொல்வோம் உலகுக்கு


நாங்கள் தமிழர்கள்-
உரக்க சொல்வோம் உலகுக்கு .......
நாங்கள் புவியின்
பண்டை புதல்வர்கள்......
தமிழ் எங்களின் மூச்சு
மறம் எங்களின் நாடி...........
பண்பு எங்களின் உயிர்
விருந்தோம்பல் எங்களின் துடிப்பு.......
விதிகளை விடுத்து
மதிகளை கொண்டு
உலகம் வெல்கிறோம்......
தடை எங்கும்
இல்லை எங்களுக்கு......
மடை திறந்து
புவி எங்கும் நாங்கள்,
எங்கள் புகழை பரப்பி.............
மனம் கொண்டு நாங்கள்
திறம் கொண்டு இங்கே.......
வான் கொள்ள நாங்கள்
வாள் எடுத்து இங்கே......
எங்கள் பெயர்தமிழர்கள்...............
யுகத்தின் முதல்வர்கள்........
புவியின்பண்டை புதல்வர்கள்..........

இர.குமார்.

வெற்றியின் உலகம்

விற்களிலே நாணேற்றி
அம்புகளை தொடுத்தார்கள்
மன்னவர்கள் எங்களின் முன்னவர்கள்.

நாங்களும் தான் தொடுக்கிறோம்
எங்கள் முயற்சி கணைகளை
உழைப்பையே நாணாக்கி.........

இலக்குகள் தூரமில்லை
இங்கே இதயம் இருந்தால்............

விதிகளும் இல்லை
இங்கே மனம் இருந்தால்.............

விதிகளின் வழிகளில்
எங்களை தொலைத்தவர்கள்
இல்லை நாங்கள்.......

மதிகளில் விழி வைத்து
எங்கள் பாதைகளை தேடுகிறோம்..............

வெற்றிகளை மட்டுமே
பரிசாக கொண்டு
ஒரு உலகம்
எங்களுக்காக காத்திருக்கிறது........

தொலைவுகள் தூரமில்லை.......
தடைகளும் இங்கில்லை.........

இதயம் உண்டு இங்கே.......
ஒரு உலகம் உண்டு இங்கே...........



இர.குமார்

வாழ்க்கை

நொடிகளின் மறைவுகளில்
காலம் தன் எல்லைகளை நகர்த்துகிறது........

அனைவருக்கும் வாழ்க்கை
பெரிய கனவுகளோடு தான் தொடங்ககுகிறது......

வாழ்க்கை சுழற்றுகின்ற சுழற்ச்சியில்
எங்கோ தூக்கி எறியப்படுகிறொம்.......

கிடைத்த இடத்தை
நிலைப்படுத்தி கொள்ளவெ
கழிகின்றன எஞ்சிய காலங்கள்........

கண்ட கனவுகள் யாவும்
கண்களுக்கு எட்டுகின்ற
நிஜங்களாய் மட்டுமே ......

கைகளுக்கு என்றும்
சற்று தள்ளியே......

வாழ்க்கை காகிதங்கள்
சூழ்நிலை காற்றால்
சில நேரம் சிறகடித்து பறக்கின்றன............

சூழ்நிலை தாக்கங்களால்
சில நேரம் சிறகடிக்க படுகிறோம்...

பறக்கத்தான் சிறகுகள் இல்லை
நடக்க என்றும் கால்கள் உண்டு
லட்சியங்களை நோக்கி........

காலத்தின் நியதிகளை
மாற்றும் உரிமை
இங்கு எவருக்கும் இல்லை....

மாற்றங்களில் அடங்கியது தான்
மனித வாழ்க்கை....

இதை உணர்ந்த எவரும்
இந்த உலகத்தில்
வருந்தியதும் இல்லை...

இதை உணர மறுத்து
வருந்திய எவரும்
உயர்ந்ததும் இல்லை........

இர.குமார்.



Friday, June 13, 2008

வாழ்க்கையின் அர்த்தங்கள்........

அழகான அர்த்தங்கள் சில இங்கே
வாழ்க்கையை செம்மைபடுத்துகின்றன.......

அர்த்தமில்லா வாழ்க்கை
பாதையில்லா பயணத்தை
போல வெறிச்சொடுகிறது......

மனிதர்களை பொறுத்தே
அர்த்தங்கள்
இங்கு மாறுபடுகின்றன........

நல்ல அர்த்தங்கள்
வாழ்க்கையின் மரங்களுக்கு
நீர் ஊற்றகின்றன...........

தவறான அர்த்தங்கள்
வாழ்க்கையின் பாதைகளில்
முட்களை நிரப்புகின்றன..........

அர்த்தங்கள் வாழ்க்கையின்
பயணங்களை
சுகமோ சுமையகவோ மாற்றுகின்றன..........

மிகச் சிறந்த அர்த்தங்களால்
வாழ்க்கையை
வளப்படுத்திக் கொள்ளுங்கள்........

அவை,
மதிகளின் விழிகளை திறக்கிறது......
சொர்க்கத்தின் கதவுகளை தட்டுகிறது.........

இர.குமார்.