Saturday, August 9, 2008

தோல்விகள் தொலைவில் நிற்கட்டும்


புழுதி படிந்த போர்களத்தின் பாசறையில்
குருதி படிந்த வாளை துடைத்து
வானை நோக்கிய பொழுது
விழியின் நீர்த்துளிகள் சில
தோல்வியினை பறைசாற்றின.............
இதயத்தில் இம்சைகள்..........
மனதில் ரணங்கள்.........
செல்லும் பாதைகள் எங்கும் தடைகற்கள்........
ஒரு பனி படர்ந்த நாளின்
புகை படிந்த கண்ணாடியாய்
தோல்விகளால் வாழ்க்கை தெளிவில்லாமல்...............
திசைகளின் கிழக்கு பிரதேசங்களிலிருந்து
சில பறவைகள் கீழிறங்கி வந்தன...........
தங்களின் முயற்சியின் சிறகுகளை
பரிசளித்து விட்டு பறந்தன...............
காற்றின் இசைக்கு தலை அசைத்த
பூக்கள் சிலதங்கள் விதைகளை
பரிசளித்து விட்டு தங்கள் பணியை தொடர்ந்தன...............
வானப் பிரதேசங்களில் ஒன்றாய்
கூடிய மேகங்கள் நீர்த்துளிகள்
சிலவற்றை தூவி குளிர்வித்தன.................
இழப்பதற்கு ஒன்றுமில்லை
மெல்லியதாய் காற்று ரீங்காரமிட்டு
ஆறுதலாய் தழுவியது................
பிம்பங்களை பிரதிபலிக்கும்
கண்ணாடியை போல்
தெளிவாய் சில வெளிச்ச பாதைகள் முன்னே.................
மனதில் மூலைகள் எங்கும்
உறுதிகள் இருக்கும் வரை..........
நினைவுகள் முழுவதும்
நம்பிக்கைகள் நிரம்பி வழியும் வரை........
இதயம் முழுதும்
வலிமைகள் இருக்கும் வரை...........
தோல்விகள் என்றும்
தொலைவில் நிற்கட்டும்.
இர.குமார்.

Thursday, August 7, 2008

இது மனதின் மழைக்காலம்

ஒரு குளிர்கால மாலை
இருளும் வேளையில்
சில நீர்த்துளிகள்
புவியை நோக்கிச் சிதறின.............

வெளிச்சப் பறவைகள்
தங்கள் சிறகுகளை முடக்கி
ஓயும் வேளையில்......
நிலவு தன் முகம்
காட்டி நகைத்தது..............

பறவைகள் சில விரைவாய்
தங்கள் கூடுகள் தேடின........
மரங்கள் மகிழ்ச்சியாய்
தங்கள் கிளைகள் விரித்தன......

மாலை மங்கும் வேளையில்
முகம் எங்கும் துளிகளாய்
இரு மான்விழிகள்
குறும்பாய் விழித்தன என்னை.......

அழகின் சாயல்கள்
சிறிதும் குறையாமல்
அதரங்கள் இரண்டு விரிந்து
இசையை தெளித்தன......

தோகைகளே இல்லாமல்
இரு கால்கள் அழகாய்
இங்கே நடை பயின்றன.

உன்னை பார்த்தபோது
நொடிகள் ஏனோ
நின்று போயின......

சிறகுகள் சில முளைத்தன......
உலகம் ஏனோ சுழன்றது கீழே........

பொழிந்தும் பொழியாமலும் மழைச்சாரல்கள்
வெளியே மட்டும் அல்ல....

உள்ளேயும் கூடத்தான்.............

இது ஒரு மழைகாலம்...........
புவியில் மட்டுமில்லை..........

என் மனதிலும் கூடத்தான்.

குமார்

நட்சத்திரங்கள் மண்ணில்.........[நாங்கள் கிள்ளைகள்]

ஒரு மழை கால மாலை நேரம்.........
மயில்கள் தோகைகள் விரிக்க
மேகங்கள் எங்கும் திரள
வானை நோக்கிய பொழுது
ஏனோ நட்சத்திரங்கள் அங்கில்லை.............

தூர் வாரிய ஓடையின் அருகே
சில காகித கப்பல்களோடு
கள்ளமில்லா சிரிப்பில்
சில வெள்ளை மனங்கள்
உவகை கொண்டன................

எண்ணங்களில் மாசில்லாமல்
வண்ணங்கள் அனைத்தும் கொண்ட
வானவில்லின் அழகோடு
வஞ்சனைகள் ஏதும் இல்லாமல்
பொய்யாய் சில சண்டைகள் அங்கே...........

சிறகுகள் இல்லாமலேயே
மண்ணில் பறந்தன இக்கிள்ளைகள்.....

வரவுகள் இல்லாமல்
செலவுகள் செய்யாமல் இங்கே
ஓர் அன்பு அரசாங்கம் இவர்களிடையே..........

கவலைகள் எங்கோ மறைய
மனம் லேசானது..........

கேள்வியின்
தோலைந்த விடையாய்
நட்சத்திரங்கள் இங்கே மண்ணில்.

இர.குமார்.

காதல் யுத்தம் துவங்கட்டும்...................

நம் இருவருக்குமிடையான மௌனங்களில்
இலைமறை காயாய் சில மொழிகள்
எப்பொழுதும்.............

உன்னை பார்க்கும் போதெல்லாம்
ஒருகுளிர் கால இரவின் ஏக்கத்தோடு
மனம் போர்வைக்காக அலைகிறது.................

உன் விழிகள் அசையும் போதெல்லாம்
மனதின் உள்ளே சில
மென்பூக்கள்மொட்டு அவிழ்கின்றன........

உன் இதழ்கள் விரியும் போதேல்லாம்
வெளியே தெரியாமல்
உள்ளே சில தூவாணங்கள்..........

உன் விழிக்குள்ளே
என்னை சிறை வைத்து
சிறையின் சாவியை துழவுகிறேன்..........

உன் இதயத்தை
திருட ஆசைபட்டு
என் இதயத்தை தொலைத்து நிற்கிறேன்...........

பொறுத்தது போதும்.........

இனியாவது........

நம்மிடையே நேசப் பூக்கள் மலரட்டும்........
காதல் யுத்தம் துவங்கட்டும்...................

இர.குமார்.




நாங்கள் வண்ணத்துப் பூச்சிகள்........

ஒரு மாலைபொழுதின் மயக்கத்திலே
ஒளி மங்கும் வேளையிலே
வண்ணத்துப் பூச்சிகள்
சிலகிறக்கமாய் சிறகுகள் விரித்தன.............

அழகின் சாயைகளையெல்லாம்
தன்னோடு கட்டிக் கொண்டு
வானம் நோக்கிமேல் எழும்பின.........

சந்தோசத்தின் பாதைகளை
எல்லாம் தேட தங்கள் பயணத்தை
துடிப்பாய்த் துவக்கின........

வழிமறித்து நின்ற என்னை
விசாரிப்புக்கள் ஏதுமின்றி
வருடியே சென்றன.............

கிளைகள் விரித்த மரங்களை
மடல்கள் விரித்த பூக்களை
உறவுகள் கொண்டாடின...........

புழுவாய் இருந்தோம்
இன்று புதிதாய் பிறந்தோம்
என்று முரசு கொட்டின...........

குரல்கள் ஏதும் இன்றி
அவைபறை எழுப்பின...............
"நாங்கள் வண்ணத்துப் பூச்சிகள்".

இர.குமார்.

மழலை காலங்கள்

சிறகு முளைத்த வண்ணத்துப் பூச்சியாய்..........
துயரங்களே இல்லாமல் துள்ளிய காலங்கள்.........

கள்ளங்களே இல்லாமல்
உள்ளம் எங்கும் உவகையாய்
உலகை வலம் வர நினைத்த காலங்கள்..........

வெறுமைகளே இல்லாமல்
வெள்ளை மனமாய், வெகுளியாய்
மிதகுகள் சில செய்து
நிலவில் மிதக்க நினைத்த காலங்கள்........

காகிதத்தில் கப்பல் செய்து
ஓடையிலே விட்டு விட்டு
கர்வமாய் இறுமாந்த காலங்கள்...........

சுமைகளே இல்லாமல்
சுகமாய் சுதந்திரமாய்
சிரிப்புக்கள் சில
சிதறிய காலங்கள்...........

மழலை காலங்கள்
மழை சாரலாய் மனதின் ஒருபுறம்......

இனிமையாய் தூறியபடி
எப்பொழுதும்..........


குமார்

காற்றுக்கு என்ன வேலி

காற்றுக்கு என்ன வேலி
மன ஊற்றுக்கு என்ன தளைகள்.....

ஆற்றுக்கண் உள்ள நீர் போல
உன் வலிவுகளின் விரிவுகளை பரப்பி செல்......

மரங்களின் வேர்களாய்
உன் அடிதளங்களை வலுவாய் அமைத்து செல்..........

விதையிலிருந்து எழும் விருட்சமாய்
என்றும் மேலே உயர்ந்து செல்......

மதியின் துணையாய்
எதிர் வரும் தடைகளை உடைத்து செல்......

உந்தன் குணங்களின் திறங்களால்
அனைவரையும் அரவணைத்து செல்......

கரைகளற்ற கடலாய் கவலைகளற்று
மகிழ்ச்சியை உனக்குள் நிரப்பிச் செல்......

பரந்த வானில் உந்தன் திறமைகளின்
சிறகுகளை விரித்து செல்......

காற்றுக்கு என்ன வெலி
மன ஊற்றுக்கு என்ன தளைகள்.....

மனங்களின் வலிவுகளால்
புதிதாய் மீண்டும் எழுது
ஒரு புதிய சரித்திரம்...........


குமார்

இது ஊடல் காலம்....[பிரிபவர்கெல்லாம்]


ஒரு வசந்த காலத்தின் மாலையில்
ஒரு ரோஜா மலருடனும்,
உன் இதழோர புன்னகையோடும்
நம் காதல் காலம் இனிதே தொடங்கியது.
விழி பரிமாற்றங்களோடு......
நம் நேசத்தின் ஊட்டத்தினால்
நம் காதல் குழந்தை
அழகாகநடை பயின்றது.............
வசந்ததிற்கு பின்னான
இலையுதிர் காலம் போல
நம் புரிதலின் சிறிய விரிசலில்
என்னுடனான
உன் ஊடல் காலம் தொடங்கியது.
நம் சந்தோச இலைகள் சில
காதல் கிளைகள் விட்டு
மண்ணில் சருகுகளாய் இளைபாறின........
உன்னை பிரிந்திருந்த
வினாடிகள் யாவும்
எப்பொழுதும்
உன்னை நினைவு படுத்தின
கண்முன் விரிந்திருந்த
உலகம் எல்லாம்
எங்கோ மறைந்தே போயின.................
சிதறி விழும் மழைத் துளிகளாய்
பொழிந்தும் பொழுயாமலும்
உன் சாரல்கள்
மனதில் எப்பொழுதும் தூறியபடி ....................
பிரிவுகள் ஏனோ
நேசத்தை அதிகப்படுத்தின.......
உடனே உன் பரிவுகள் காண
மனம் சிறகுகள் தேடின............
காற்றை தூது அனுப்புகிறேன் காதலி......
மன்னிப்பை ஏற்றுக் கொள்........
நம் காதலை உணர்த்திய
இதுஓர் ஊடற் காலம்.
இர.குமார்.

நினைவுகள்


அருகம்புல்லின் பனித்துளியாய்
அதிகாலையில் ஏனோ
உன் நினைவுகள்.............

துயில் கலைந்த நான்நிழலாய்
உனை தேடிய போது
நிஜங்கள் நினைவுகளை கனவென்றென............

காலை நேரத்து உறக்கம்
இன்னும் மிச்சமிருந்தது......

மனம் ஏனோ கசந்தது.........
தொலைத்து விட்ட
உற்க்கத்திற்காகவும் அல்ல......
கலைந்து விட்ட
கனவுகளுக்காகவும் அல்ல..

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக.

இர.குமார்.

போர்ப் புரவிகள்



கடிவாளங்களற்று.............
எல்லா திசைகளிலும் இயங்கும்
புரவியின் வேகத்தை சார்ந்தவை
மனிதரின் மனங்கள்....................

தளைகள் ஏதும் இன்றி
திசைகள் நான்கின் ஈர்ப்பில்
திமிர் வெள்ளம் எடுத்து
தங்கள் வேகச் சிறகுகளைவிரிப்பவை
இந்த மனப் புரவிகள்..............

கடிவாளங்கள் கொண்டு
பயிற்ச்சிகள் பெற்று
வாழ்க்கையின் இலக்குகளுக்காக
போராடும் மனங்கள்
இங்கே போர்ப் புரவிகள் ஆகின்றன.............

எங்கெல்லாம் மனம்
வலிமையின் புரவிகளை
இட்டுச் செல்கிறதோ
அங்கெல்லாம் அசைகின்றன
வெற்றியின் கொடிகள்......................

எங்கெல்லாம் மனம்
திறமையின் சிறகுகளை
விரித்துச் செல்கிறதோ
அங்கெல்லாம் விரிகின்றன
வலிமையின் சாமரங்கள்...................

வாழ்கையின் களங்களில்
வாட்களை ஏந்தி
தடைகளை கடந்து
வெல்கையின் இலக்கை நோக்கி
மட்டுமே நகர்கின்றன
பயிற்சிகள் பெற்ற மனப் புரவிகள்...............

மனதை பழக்கக் கற்றுக் கொள்ளுங்கள்............
உடலை போலவே
மனதின் வலிமைக்கும்
பயிற்சிகள் அவசியம் ஆகின்றன..............
நாளைய உலகை வெல்ல
தொடங்கட்டும் பயணம்
உங்கள் போர்ப் புரவிகளில் இன்றே.

இர.குமார்.

யுத்தங்கள் இனித் தொடங்கட்டும்...........





கார்மேகங்கள் சாரல்கள் தூவ

மைதானங்களின் மேல்

சில மழலைகள்

விளையாட்டாய் வாளெடுத்து.............

தீமைகள் எங்கு விளைந்தாலும்

கண்ணன் வருவான்........,

மனித உருவெடுத்து.........

பிறர் மனம் மகிழ வில்லெடுத்து.............

தொலைவில் ஒரு பாட்டியின் குரல்

நெடுங்கதையாய்...................

மனிதம் அற்று மரத்துப் போய்...........

கொடுமைகள் கண்டு

கண்கள் பூத்துப் போய்.......

அச்சங்களின் வேர்கள் ஆழப் பரவ........

வலிகளின் வாசனையை நுகராதவர்களாய்

இங்கு வாழும் மிகப் பலர்..................


பாதைகள் எங்கும் மலர்கள் தூவ......

வீதிகள் எங்கும் தோரணங்கள் கட்டி........

முட்களின் நுனிகளை அறியாது......,


ரோஜாக்களின் இதழ்களை சூடி........

ரதங்களில் உலா வருபவர்கள்

இங்கு மறு சிலர்..........................


ஒரு பாலைவன நாளின்

புழுதி படிந்த வாகன கண்ணாடியாய்.........

தெளிவில்லாமல் நித்தம் சுற்றுலாக்கள்......

கானல் நீரை தேடி...........

பாலைவன சோலைகளை நாடி..............

மாற்றங்கள் இனியெங்கிலும்

இனிதே மலரட்டும்........


நன்மைகளின் விதைகள் விருட்சங்களாய்

வான் நோக்கி செழிக்கட்டும்...........


கதிர்கள் பட்ட பனித்திரைகளாய்

உங்கள் அச்சங்கள் உடையட்டும்............


உங்கள் வாள்களின் நுனியில்

தீமைகள் புதையட்டும்.................


உங்கள் வலிமைகளின் வேர்களில்

நாளைய உலகம் வளரட்டும்...........


வாழ்க்கையின் யுத்தங்கள்

இன்றே இனிதே தொடங்கட்டும்................


இர.குமார்