
அழகாய்தான் மின்னுகிறாய்
என் காதலியே
தொலைவில்....................
அருகில் வந்ததும்
ஏனோ மறைந்து போகிறாய்..............
உந்தன் வெளிச்சங்களை தேடி
எப்பொழுதும் என் சுவடுகள்
புதைந்த இருளில் மறைந்து
போவாய் என்றே தெரிந்திருந்தும்..............
நடைபாதை பொம்மை கடைகளை
பார்த்த சிறு குழந்தையை போல்
என் மனம் உன்னை பார்த்து...............
மை தீர்ந்த பேனாவை போல்
நின்று போகிறது உன்னை காணாமல்..............
எழுதி முடித்த கவிதை போலவே
உன்னை வாசிக்க விரும்புகிறேன்..........
இருந்தும் தாளகள் அனைத்தும்
மையின்றி வெள்ளையாய்..................
அழகான வண்ணத்துப் பூச்சி நீ
என்று நினைத்தே
என் கைகளை நீட்டுகிறேன்...............
நீயோ என் காதலி...............
இருளில் தொலைந்து பிறக்கும்
மின்மினிப் பூச்சி......
கண்களில் அருகில்........
எப்பொழுதும்
கைகளில் தொலைவில்.............
இர.குமார்.
2 comments:
its good.your felling is so nice
its good.your felling is so nice
Post a Comment