வாழ்க்கையின் களங்களில்
நாளும் சில யுத்தங்கள்நிதர்சனகளில்.
நித்தம் சில வெற்றிகள்......
நித்தம் சில தோல்விகள்......
யுத்த களங்களின் வெளி நின்று
பார்க்க மட்டுமே விரும்புகின்றவர்
இங்கு மிக பலர்.
வெற்றியின் சிறகுகளை மட்டுமே
அணிய துணிந்தவர்கள் இவர்கள்.
தோல்விகளையும் ,விழுபுண்களையும்
ஒரு பொழுதும் விரும்பாதவர்கள்.....
நெஞ்சின் உரம் கொண்டு
களங்களின் உள் செல்பவர் மிக சிலர்.....
அங்கே வெற்றியை பெறுபவர் மிக சிலர்...
விழுபுண்களை பெற்று மாள்பவர் ஒரு சிலர்.......
மனதின் வலிமை அறிந்து
தங்களின் திறங்களை அறிந்து உள்செல்பவர்கள்
என்றும் வெல்கிறார்கள்......
விதைகளாய் தங்களையே ஊன்றி
விருட்சமாய் வான் நோக்கி உயர்கிறார்கள்...
வன்மைகள் பல புதிதாய் பெற்று
விந்தைகள் பல புதிதாய் செய்கிறார்கள்........
காலம் உள்ளவும்
தங்கள் முகவரிகளை நிலைநிறுத்துகிறார்கள்......
களங்களின் வெளி நிற்கும் கூட்டமோ
பார்த்து கொண்டு மட்டுமே நிற்கிறது
இவற்றை தொடவேமுடியாத எல்லைகள்
என்று மட்டுமே எண்ணி.............
இர.குமார்.