Friday, May 2, 2008

நிதர்சன யுத்தம்.......


வாழ்க்கையின் களங்களில்

நாளும் சில யுத்தங்கள்நிதர்சனகளில்.

நித்தம் சில வெற்றிகள்......

நித்தம் சில தோல்விகள்......


யுத்த களங்களின் வெளி நின்று

பார்க்க மட்டுமே விரும்புகின்றவர்

இங்கு மிக பலர்.

வெற்றியின் சிறகுகளை மட்டுமே

அணிய துணிந்தவர்கள் இவர்கள்.


தோல்விகளையும் ,விழுபுண்களையும்

ஒரு பொழுதும் விரும்பாதவர்கள்.....


நெஞ்சின் உரம் கொண்டு

களங்களின் உள் செல்பவர் மிக சிலர்.....

அங்கே வெற்றியை பெறுபவர் மிக சிலர்...

விழுபுண்களை பெற்று மாள்பவர் ஒரு சிலர்.......


மனதின் வலிமை அறிந்து

தங்களின் திறங்களை அறிந்து உள்செல்பவர்கள்

என்றும் வெல்கிறார்கள்......

விதைகளாய் தங்களையே ஊன்றி

விருட்சமாய் வான் நோக்கி உயர்கிறார்கள்...


வன்மைகள் பல புதிதாய் பெற்று

விந்தைகள் பல புதிதாய் செய்கிறார்கள்........

காலம் உள்ளவும்

தங்கள் முகவரிகளை நிலைநிறுத்துகிறார்கள்......


களங்களின் வெளி நிற்கும் கூட்டமோ

பார்த்து கொண்டு மட்டுமே நிற்கிறது

இவற்றை தொடவேமுடியாத எல்லைகள்

என்று மட்டுமே எண்ணி.............


இர.குமார்.

வீழ்வதெல்லாம் தோல்விகள் அல்ல......


வீழ்வதெல்லாம் தோல்விகள் அல்ல......

எழுவதற்கான முதல் வழிகள் அவைதான்........


தோல்விகளெல்லாம் துயரங்கள் அல்ல

வெற்றியின் முதல் விளிம்புகள் அவைதான்......


துயரங்கள் எல்லாம் நிரந்தரங்கள் அல்ல.......

மகிழ்வின்

முதல் தொடக்கங்கள் அவை தான்.........


இருமைகள்தான்வெளிச்சத்தை விளம்பரபடுத்துகின்றன........

இரவுகள் தான் விடியலை தருகின்றன...............


சேற்றிலிருந்து தான்செந்தாமரைகள் பிறக்கின்றன.......

கருமைதான் வெண்மையை தெளிவாகக் காட்டுகின்றன.........


உறுதிகள் மனதில் இருக்கும் வரை

விடியும் நாள் தூரம் இல்லை......


இதயம் இங்கே இருக்கும் வரை

இருள் விலகும் நாள்

தொலைவில் இல்லை.........


இங்கே,

வீழ்வதெல்லாம் தோல்விகளல்ல

எழுவதற்கான

முதல் வழிகள் அவைதான்......


இர.குமார்.

மாயமான் வேட்டை.......


அம்புகளின் தொடுப்பில்

சலசலத்தன சில பூக்கள்.....

மான்கள் பல ஓடின.....

அதை தொடர்ந்து

சில வேட்டைகளும் தொட்ங்கின......

பெண்,பொன்,மண்

மனம்,பணம்

மான்கள் பல

இங்கே இந்த புவியில்.....


வேடர்கள் பல......

வேட்டைகள் பல.....

எப்பொழுதும் துரத்தல்கள் இங்கே........

தேடுதல்களின் வேகம்

எப்பொழுதும் தீவிரமாய்......


வாழ்க்கை

ஒரு மாய மான் வேட்டை....

இங்கே வேட்டைகள்

மட்டும் தொடரும்....

மான்கள்

எப்பொழுதும் மாயமாய்...............

ஜன்னலை திறங்கள் காற்று வரட்டும்.........


மனதை சிறை வைப்பவர்கள்

என்றும் மகிழ்வதில்லைஇங்கே.............

உங்கள் மனச் சாளாரங்களைஎன்றும்

அகலத் திறந்துவைக்க முயலுங்கள்.........

அங்கே காற்று வரட்டும்........

மடல்கள் திறந்தே பின்னே

தெரியும் பூக்கள் போல........

மனம் திறந்த பின்னே

இதயம் இங்குசிறகு விரிக்கும்........

சில வண்ணத்துப் பூச்சிகள் படபடக்கும்.............

சில மின்மினிப் பூச்சிகள்

வெளிச்சம் தெளிக்கும்..........

மகிழம் பூக்கள் மடல்கள்

திறந்தே மனம் வீசும்..........

வானம் இன்றியே

வானவில் நிறம் காட்டும்.........

இறுகிய மனம் எப்பொழுதும்

இருளை மட்டுமே ஈர்க்கும்........

இள்கிய மனம்

என்றும்இதயம் கவரும்........


உங்கள் ஜன்னல்களைதிறந்து வையுங்கள்..........

அங்கே காற்று வரட்டும்.......


உவகைகள் நிரம்ப........

உள்ளம் பொங்க........

என்றும் மகிழ்ச்சிவெள்ளம் பாயட்டும்............


இர.குமார்.


புதிதாய் மீண்டும் பிறப்போம்.........


புதிதாய் மீண்டும் பிறப்போம்.........
இறந்த நொடிகளை மறந்து
இருக்கும் புதிய நொடிகளுக்குள் நுழைவோம்..............
விதியின் வரைமுறைகள் தாண்டி
புதிய வரம்புகள் தொட
என்றும் முயற்சி செய்வோம்.........
வல்லமைகள் பல புதிதாய் பெறுவோம்.....
விந்தைகள் பல
இந்த புவியில் புதிதாய் செய்வோம்..........
உழைப்பையே உரமாக்கி
நம் முயற்சி விதைகளை
இந்த பூமியில் தூவுவோம்.............
இமயமே இலக்காய்........
விடியலே நோக்காய்
எழுந்து நின்று போராடுவோம்..........
இந்த உலகம் உள்ளளவும்
நம் முகவரி இப்புவியில்
நிலைத்திருக்க முயற்சி செய்வோம்.........
புதிதாய் மீண்டும்
நாம் இங்கு பிறப்போம்.
இர.குமார்.

Thursday, May 1, 2008

இது என் கவிதை தோட்டம்




எழுத்துக்களை கோர்த்து சொற்களை படைத்தேன்


சொற்களை விதைத்து கவிதை அறுத்தேன்


எண்ணங்களை மழையாக்கி என் உள்ளத்தை தெளித்தேன்


என் மனதினை ஊற்றி கவி பூக்கள் பறித்தேன்


என் கற்பனை கொண்டு கிளைகள் விரித்தேன்


என் மகிழ்ச்சியை கொண்டு சில கூடுகள் செய்தேன்


சில பறவைகள் அங்கே இளைபாற கண்டேன்


வாருங்கள் தோழர்களே ..........




இது என் கவிதை தோட்டம் ........



இங்கே இளைப்பாற வாருங்கள்........



இர.குமார்.