ஒரு மாலைபொழுதின் மயக்கத்திலே
ஒளி மங்கும் வேளையிலே
வண்ணத்துப் பூச்சிகள்
சிலகிறக்கமாய் சிறகுகள் விரித்தன.............
அழகின் சாயைகளையெல்லாம்
தன்னோடு கட்டிக் கொண்டு
வானம் நோக்கிமேல் எழும்பின.........
சந்தோசத்தின் பாதைகளை
எல்லாம் தேட தங்கள் பயணத்தை
துடிப்பாய்த் துவக்கின........
வழிமறித்து நின்ற என்னை
விசாரிப்புக்கள் ஏதுமின்றி
வருடியே சென்றன.............
கிளைகள் விரித்த மரங்களை
மடல்கள் விரித்த பூக்களை
உறவுகள் கொண்டாடின...........
புழுவாய் இருந்தோம்
இன்று புதிதாய் பிறந்தோம்
என்று முரசு கொட்டின...........
குரல்கள் ஏதும் இன்றி
அவைபறை எழுப்பின...............
"நாங்கள் வண்ணத்துப் பூச்சிகள்".
இர.குமார்.
No comments:
Post a Comment