ஒரு வசந்த காலத்தின் மாலையில்
ஒரு ரோஜா மலருடனும்,
உன் இதழோர புன்னகையோடும்
நம் காதல் காலம் இனிதே தொடங்கியது.
விழி பரிமாற்றங்களோடு......
நம் நேசத்தின் ஊட்டத்தினால்
நம் காதல் குழந்தை
அழகாகநடை பயின்றது.............
வசந்ததிற்கு பின்னான
இலையுதிர் காலம் போல
நம் புரிதலின் சிறிய விரிசலில்
என்னுடனான
உன் ஊடல் காலம் தொடங்கியது.
நம் சந்தோச இலைகள் சில
காதல் கிளைகள் விட்டு
மண்ணில் சருகுகளாய் இளைபாறின........
உன்னை பிரிந்திருந்த
வினாடிகள் யாவும்
எப்பொழுதும்
உன்னை நினைவு படுத்தின
கண்முன் விரிந்திருந்த
உலகம் எல்லாம்
எங்கோ மறைந்தே போயின.................
சிதறி விழும் மழைத் துளிகளாய்
பொழிந்தும் பொழுயாமலும்
உன் சாரல்கள்
மனதில் எப்பொழுதும் தூறியபடி ....................
பிரிவுகள் ஏனோ
நேசத்தை அதிகப்படுத்தின.......
உடனே உன் பரிவுகள் காண
மனம் சிறகுகள் தேடின............
காற்றை தூது அனுப்புகிறேன் காதலி......
மன்னிப்பை ஏற்றுக் கொள்........
நம் காதலை உணர்த்திய
இதுஓர் ஊடற் காலம்.
இர.குமார்.
1 comment:
//சிதறி விழும் மழைத் துளிகளாய்
பொழிந்தும் பொழுயாமலும்
உன் சாரல்கள்
மனதில் எப்பொழுதும் தூறியபடி//
Nice lines....
-Kovai sathish
Post a Comment