காற்றுக்கு என்ன வேலி
மன ஊற்றுக்கு என்ன தளைகள்.....
ஆற்றுக்கண் உள்ள நீர் போல
உன் வலிவுகளின் விரிவுகளை பரப்பி செல்......
மரங்களின் வேர்களாய்
உன் அடிதளங்களை வலுவாய் அமைத்து செல்..........
விதையிலிருந்து எழும் விருட்சமாய்
என்றும் மேலே உயர்ந்து செல்......
மதியின் துணையாய்
எதிர் வரும் தடைகளை உடைத்து செல்......
உந்தன் குணங்களின் திறங்களால்
அனைவரையும் அரவணைத்து செல்......
கரைகளற்ற கடலாய் கவலைகளற்று
மகிழ்ச்சியை உனக்குள் நிரப்பிச் செல்......
பரந்த வானில் உந்தன் திறமைகளின்
சிறகுகளை விரித்து செல்......
காற்றுக்கு என்ன வெலி
மன ஊற்றுக்கு என்ன தளைகள்.....
மனங்களின் வலிவுகளால்
புதிதாய் மீண்டும் எழுது
ஒரு புதிய சரித்திரம்...........
குமார்
No comments:
Post a Comment