எழுத்துக்களை கோர்த்து சொற்களை படைத்தேன்
சொற்களை விதைத்து கவிதை அறுத்தேன்
எண்ணங்களை மழையாக்கி என் உள்ளத்தை தெளித்தேன்
என் மனதினை ஊற்றி கவி பூக்கள் பறித்தேன்
என் கற்பனை கொண்டு கிளைகள் விரித்தேன்
என் மகிழ்ச்சியை கொண்டு சில கூடுகள் செய்தேன்
சில பறவைகள் அங்கே இளைபாற கண்டேன்
வாருங்கள் தோழர்களே ..........
இது என் கவிதை தோட்டம் ........
இங்கே இளைப்பாற வாருங்கள்........
இர.குமார்.
No comments:
Post a Comment