Thursday, May 1, 2008

இது என் கவிதை தோட்டம்




எழுத்துக்களை கோர்த்து சொற்களை படைத்தேன்


சொற்களை விதைத்து கவிதை அறுத்தேன்


எண்ணங்களை மழையாக்கி என் உள்ளத்தை தெளித்தேன்


என் மனதினை ஊற்றி கவி பூக்கள் பறித்தேன்


என் கற்பனை கொண்டு கிளைகள் விரித்தேன்


என் மகிழ்ச்சியை கொண்டு சில கூடுகள் செய்தேன்


சில பறவைகள் அங்கே இளைபாற கண்டேன்


வாருங்கள் தோழர்களே ..........




இது என் கவிதை தோட்டம் ........



இங்கே இளைப்பாற வாருங்கள்........



இர.குமார்.

No comments: