Saturday, August 9, 2008

தோல்விகள் தொலைவில் நிற்கட்டும்


புழுதி படிந்த போர்களத்தின் பாசறையில்
குருதி படிந்த வாளை துடைத்து
வானை நோக்கிய பொழுது
விழியின் நீர்த்துளிகள் சில
தோல்வியினை பறைசாற்றின.............
இதயத்தில் இம்சைகள்..........
மனதில் ரணங்கள்.........
செல்லும் பாதைகள் எங்கும் தடைகற்கள்........
ஒரு பனி படர்ந்த நாளின்
புகை படிந்த கண்ணாடியாய்
தோல்விகளால் வாழ்க்கை தெளிவில்லாமல்...............
திசைகளின் கிழக்கு பிரதேசங்களிலிருந்து
சில பறவைகள் கீழிறங்கி வந்தன...........
தங்களின் முயற்சியின் சிறகுகளை
பரிசளித்து விட்டு பறந்தன...............
காற்றின் இசைக்கு தலை அசைத்த
பூக்கள் சிலதங்கள் விதைகளை
பரிசளித்து விட்டு தங்கள் பணியை தொடர்ந்தன...............
வானப் பிரதேசங்களில் ஒன்றாய்
கூடிய மேகங்கள் நீர்த்துளிகள்
சிலவற்றை தூவி குளிர்வித்தன.................
இழப்பதற்கு ஒன்றுமில்லை
மெல்லியதாய் காற்று ரீங்காரமிட்டு
ஆறுதலாய் தழுவியது................
பிம்பங்களை பிரதிபலிக்கும்
கண்ணாடியை போல்
தெளிவாய் சில வெளிச்ச பாதைகள் முன்னே.................
மனதில் மூலைகள் எங்கும்
உறுதிகள் இருக்கும் வரை..........
நினைவுகள் முழுவதும்
நம்பிக்கைகள் நிரம்பி வழியும் வரை........
இதயம் முழுதும்
வலிமைகள் இருக்கும் வரை...........
தோல்விகள் என்றும்
தொலைவில் நிற்கட்டும்.
இர.குமார்.

5 comments:

Anonymous said...

குமார்! உன் கவிதைப் பூக்களில் வீசும் நேசம் வாசமாய் இருக்கிறது

Aarathy joseph said...
This comment has been removed by the author.
Unknown said...

hi kumar,
wonderful lines...
your words are pearls!!!!!
good job!!!

தமிழ்த்தோட்டம் said...

அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்

dhinakaran said...

hai friend i see your kavithaikal that is very super