நம் இருவருக்குமிடையான மௌனங்களில்
இலைமறை காயாய் சில மொழிகள்
எப்பொழுதும்.............
உன்னை பார்க்கும் போதெல்லாம்
ஒருகுளிர் கால இரவின் ஏக்கத்தோடு
மனம் போர்வைக்காக அலைகிறது.................
உன் விழிகள் அசையும் போதெல்லாம்
மனதின் உள்ளே சில
மென்பூக்கள்மொட்டு அவிழ்கின்றன........
உன் இதழ்கள் விரியும் போதேல்லாம்
வெளியே தெரியாமல்
உள்ளே சில தூவாணங்கள்..........
உன் விழிக்குள்ளே
என்னை சிறை வைத்து
சிறையின் சாவியை துழவுகிறேன்..........
உன் இதயத்தை
திருட ஆசைபட்டு
என் இதயத்தை தொலைத்து நிற்கிறேன்...........
பொறுத்தது போதும்.........
இனியாவது........
நம்மிடையே நேசப் பூக்கள் மலரட்டும்........
காதல் யுத்தம் துவங்கட்டும்...................
இர.குமார்.
1 comment:
//உன் இதயத்தை
திருட ஆசைபட்டு
என் இதயத்தை தொலைத்து நிற்கிறேன்..........//
Superuuuuu..... Kalakkiteenga....
Post a Comment