Thursday, August 7, 2008

போர்ப் புரவிகள்



கடிவாளங்களற்று.............
எல்லா திசைகளிலும் இயங்கும்
புரவியின் வேகத்தை சார்ந்தவை
மனிதரின் மனங்கள்....................

தளைகள் ஏதும் இன்றி
திசைகள் நான்கின் ஈர்ப்பில்
திமிர் வெள்ளம் எடுத்து
தங்கள் வேகச் சிறகுகளைவிரிப்பவை
இந்த மனப் புரவிகள்..............

கடிவாளங்கள் கொண்டு
பயிற்ச்சிகள் பெற்று
வாழ்க்கையின் இலக்குகளுக்காக
போராடும் மனங்கள்
இங்கே போர்ப் புரவிகள் ஆகின்றன.............

எங்கெல்லாம் மனம்
வலிமையின் புரவிகளை
இட்டுச் செல்கிறதோ
அங்கெல்லாம் அசைகின்றன
வெற்றியின் கொடிகள்......................

எங்கெல்லாம் மனம்
திறமையின் சிறகுகளை
விரித்துச் செல்கிறதோ
அங்கெல்லாம் விரிகின்றன
வலிமையின் சாமரங்கள்...................

வாழ்கையின் களங்களில்
வாட்களை ஏந்தி
தடைகளை கடந்து
வெல்கையின் இலக்கை நோக்கி
மட்டுமே நகர்கின்றன
பயிற்சிகள் பெற்ற மனப் புரவிகள்...............

மனதை பழக்கக் கற்றுக் கொள்ளுங்கள்............
உடலை போலவே
மனதின் வலிமைக்கும்
பயிற்சிகள் அவசியம் ஆகின்றன..............
நாளைய உலகை வெல்ல
தொடங்கட்டும் பயணம்
உங்கள் போர்ப் புரவிகளில் இன்றே.

இர.குமார்.

No comments: