Thursday, August 7, 2008

யுத்தங்கள் இனித் தொடங்கட்டும்...........





கார்மேகங்கள் சாரல்கள் தூவ

மைதானங்களின் மேல்

சில மழலைகள்

விளையாட்டாய் வாளெடுத்து.............

தீமைகள் எங்கு விளைந்தாலும்

கண்ணன் வருவான்........,

மனித உருவெடுத்து.........

பிறர் மனம் மகிழ வில்லெடுத்து.............

தொலைவில் ஒரு பாட்டியின் குரல்

நெடுங்கதையாய்...................

மனிதம் அற்று மரத்துப் போய்...........

கொடுமைகள் கண்டு

கண்கள் பூத்துப் போய்.......

அச்சங்களின் வேர்கள் ஆழப் பரவ........

வலிகளின் வாசனையை நுகராதவர்களாய்

இங்கு வாழும் மிகப் பலர்..................


பாதைகள் எங்கும் மலர்கள் தூவ......

வீதிகள் எங்கும் தோரணங்கள் கட்டி........

முட்களின் நுனிகளை அறியாது......,


ரோஜாக்களின் இதழ்களை சூடி........

ரதங்களில் உலா வருபவர்கள்

இங்கு மறு சிலர்..........................


ஒரு பாலைவன நாளின்

புழுதி படிந்த வாகன கண்ணாடியாய்.........

தெளிவில்லாமல் நித்தம் சுற்றுலாக்கள்......

கானல் நீரை தேடி...........

பாலைவன சோலைகளை நாடி..............

மாற்றங்கள் இனியெங்கிலும்

இனிதே மலரட்டும்........


நன்மைகளின் விதைகள் விருட்சங்களாய்

வான் நோக்கி செழிக்கட்டும்...........


கதிர்கள் பட்ட பனித்திரைகளாய்

உங்கள் அச்சங்கள் உடையட்டும்............


உங்கள் வாள்களின் நுனியில்

தீமைகள் புதையட்டும்.................


உங்கள் வலிமைகளின் வேர்களில்

நாளைய உலகம் வளரட்டும்...........


வாழ்க்கையின் யுத்தங்கள்

இன்றே இனிதே தொடங்கட்டும்................


இர.குமார்



No comments: