Thursday, August 7, 2008

நட்சத்திரங்கள் மண்ணில்.........[நாங்கள் கிள்ளைகள்]

ஒரு மழை கால மாலை நேரம்.........
மயில்கள் தோகைகள் விரிக்க
மேகங்கள் எங்கும் திரள
வானை நோக்கிய பொழுது
ஏனோ நட்சத்திரங்கள் அங்கில்லை.............

தூர் வாரிய ஓடையின் அருகே
சில காகித கப்பல்களோடு
கள்ளமில்லா சிரிப்பில்
சில வெள்ளை மனங்கள்
உவகை கொண்டன................

எண்ணங்களில் மாசில்லாமல்
வண்ணங்கள் அனைத்தும் கொண்ட
வானவில்லின் அழகோடு
வஞ்சனைகள் ஏதும் இல்லாமல்
பொய்யாய் சில சண்டைகள் அங்கே...........

சிறகுகள் இல்லாமலேயே
மண்ணில் பறந்தன இக்கிள்ளைகள்.....

வரவுகள் இல்லாமல்
செலவுகள் செய்யாமல் இங்கே
ஓர் அன்பு அரசாங்கம் இவர்களிடையே..........

கவலைகள் எங்கோ மறைய
மனம் லேசானது..........

கேள்வியின்
தோலைந்த விடையாய்
நட்சத்திரங்கள் இங்கே மண்ணில்.

இர.குமார்.

No comments: