Saturday, June 14, 2008

அழகாய் ஒரு உலகம்

அருகம்புல்லில் அழகாய்
சில பனித்துளிகள் அதிகாலையில்.....................

சிலிர்ப்பாய் என் மேல்
சிலகாலை நேரத்து சாரல்கள்...........

படபடப்பாய் சில வண்ணத்துப்பூச்சிகள்
என் வழியில்........

வழிமறித்து நின்ற
என்னை வருடியே
சென்றன சிறகடிப்போடு..........

வானத்தில் சில நிறக்கோடுகள்
வானவில் ஜாலங்கள்
எங்கும் வண்ணம் நிரம்பி........

பூக்கள் சில
என்னை நோக்கி
மணத்தோடு நகைத்தன......

வண்டுகள் சில
காதில் இசைத்தன........

மூங்கில் காடுகள்
காற்றில் கீதம் இசைத்தன........

மரங்கள் பசுமையாய்
அருகேஅழைத்தன......

காற்றின் இதமான வருடலோடு
மனம் இரம்மியமானது.......

அழகாய் தான்
இருக்கிறது உலகம்.........

மனம் எங்கும்
ரசனையை தூவி
விழி விரித்து
இதயம் திறந்து
பார்க்கும் போதெல்லாம்...............


இர.குமார்.


No comments: