Saturday, June 14, 2008

நாங்கள் தமிழர்கள்-உரக்க சொல்வோம் உலகுக்கு


நாங்கள் தமிழர்கள்-
உரக்க சொல்வோம் உலகுக்கு .......
நாங்கள் புவியின்
பண்டை புதல்வர்கள்......
தமிழ் எங்களின் மூச்சு
மறம் எங்களின் நாடி...........
பண்பு எங்களின் உயிர்
விருந்தோம்பல் எங்களின் துடிப்பு.......
விதிகளை விடுத்து
மதிகளை கொண்டு
உலகம் வெல்கிறோம்......
தடை எங்கும்
இல்லை எங்களுக்கு......
மடை திறந்து
புவி எங்கும் நாங்கள்,
எங்கள் புகழை பரப்பி.............
மனம் கொண்டு நாங்கள்
திறம் கொண்டு இங்கே.......
வான் கொள்ள நாங்கள்
வாள் எடுத்து இங்கே......
எங்கள் பெயர்தமிழர்கள்...............
யுகத்தின் முதல்வர்கள்........
புவியின்பண்டை புதல்வர்கள்..........

இர.குமார்.

No comments: