விற்களிலே நாணேற்றி
அம்புகளை தொடுத்தார்கள்
மன்னவர்கள் எங்களின் முன்னவர்கள்.
நாங்களும் தான் தொடுக்கிறோம்
எங்கள் முயற்சி கணைகளை
உழைப்பையே நாணாக்கி.........
இலக்குகள் தூரமில்லை
இங்கே இதயம் இருந்தால்............
விதிகளும் இல்லை
இங்கே மனம் இருந்தால்.............
விதிகளின் வழிகளில்
எங்களை தொலைத்தவர்கள்
இல்லை நாங்கள்.......
மதிகளில் விழி வைத்து
எங்கள் பாதைகளை தேடுகிறோம்..............
வெற்றிகளை மட்டுமே
பரிசாக கொண்டு
ஒரு உலகம்
எங்களுக்காக காத்திருக்கிறது........
தொலைவுகள் தூரமில்லை.......
தடைகளும் இங்கில்லை.........
இதயம் உண்டு இங்கே.......
ஒரு உலகம் உண்டு இங்கே...........
இர.குமார்
1 comment:
wel done buddy
Post a Comment