நொடிகளின் மறைவுகளில்
காலம் தன் எல்லைகளை நகர்த்துகிறது........
அனைவருக்கும் வாழ்க்கை
பெரிய கனவுகளோடு தான் தொடங்ககுகிறது......
வாழ்க்கை சுழற்றுகின்ற சுழற்ச்சியில்
எங்கோ தூக்கி எறியப்படுகிறொம்.......
கிடைத்த இடத்தை
நிலைப்படுத்தி கொள்ளவெ
கழிகின்றன எஞ்சிய காலங்கள்........
கண்ட கனவுகள் யாவும்
கண்களுக்கு எட்டுகின்ற
நிஜங்களாய் மட்டுமே ......
கைகளுக்கு என்றும்
சற்று தள்ளியே......
வாழ்க்கை காகிதங்கள்
சூழ்நிலை காற்றால்
சில நேரம் சிறகடித்து பறக்கின்றன............
சூழ்நிலை தாக்கங்களால்
சில நேரம் சிறகடிக்க படுகிறோம்...
பறக்கத்தான் சிறகுகள் இல்லை
நடக்க என்றும் கால்கள் உண்டு
லட்சியங்களை நோக்கி........
காலத்தின் நியதிகளை
மாற்றும் உரிமை
இங்கு எவருக்கும் இல்லை....
மாற்றங்களில் அடங்கியது தான்
மனித வாழ்க்கை....
இதை உணர்ந்த எவரும்
இந்த உலகத்தில்
வருந்தியதும் இல்லை...
இதை உணர மறுத்து
வருந்திய எவரும்
உயர்ந்ததும் இல்லை........
இர.குமார்.
No comments:
Post a Comment