மனதை சிறை வைப்பவர்கள்
என்றும் மகிழ்வதில்லைஇங்கே.............
உங்கள் மனச் சாளாரங்களைஎன்றும்
அகலத் திறந்துவைக்க முயலுங்கள்.........
அங்கே காற்று வரட்டும்........
மடல்கள் திறந்தே பின்னே
தெரியும் பூக்கள் போல........
மனம் திறந்த பின்னே
இதயம் இங்குசிறகு விரிக்கும்........
சில வண்ணத்துப் பூச்சிகள் படபடக்கும்.............
சில மின்மினிப் பூச்சிகள்
வெளிச்சம் தெளிக்கும்..........
மகிழம் பூக்கள் மடல்கள்
திறந்தே மனம் வீசும்..........
வானம் இன்றியே
வானவில் நிறம் காட்டும்.........
இறுகிய மனம் எப்பொழுதும்
இருளை மட்டுமே ஈர்க்கும்........
இள்கிய மனம்
என்றும்இதயம் கவரும்........
உங்கள் ஜன்னல்களைதிறந்து வையுங்கள்..........
அங்கே காற்று வரட்டும்.......
உவகைகள் நிரம்ப........
உள்ளம் பொங்க........
என்றும் மகிழ்ச்சிவெள்ளம் பாயட்டும்............
இர.குமார்.
1 comment:
amazing lines....i got wonderful breeze from your lines!!!!!!!
Post a Comment