Friday, May 2, 2008

புதிதாய் மீண்டும் பிறப்போம்.........


புதிதாய் மீண்டும் பிறப்போம்.........
இறந்த நொடிகளை மறந்து
இருக்கும் புதிய நொடிகளுக்குள் நுழைவோம்..............
விதியின் வரைமுறைகள் தாண்டி
புதிய வரம்புகள் தொட
என்றும் முயற்சி செய்வோம்.........
வல்லமைகள் பல புதிதாய் பெறுவோம்.....
விந்தைகள் பல
இந்த புவியில் புதிதாய் செய்வோம்..........
உழைப்பையே உரமாக்கி
நம் முயற்சி விதைகளை
இந்த பூமியில் தூவுவோம்.............
இமயமே இலக்காய்........
விடியலே நோக்காய்
எழுந்து நின்று போராடுவோம்..........
இந்த உலகம் உள்ளளவும்
நம் முகவரி இப்புவியில்
நிலைத்திருக்க முயற்சி செய்வோம்.........
புதிதாய் மீண்டும்
நாம் இங்கு பிறப்போம்.
இர.குமார்.

No comments: