Friday, May 2, 2008

வீழ்வதெல்லாம் தோல்விகள் அல்ல......


வீழ்வதெல்லாம் தோல்விகள் அல்ல......

எழுவதற்கான முதல் வழிகள் அவைதான்........


தோல்விகளெல்லாம் துயரங்கள் அல்ல

வெற்றியின் முதல் விளிம்புகள் அவைதான்......


துயரங்கள் எல்லாம் நிரந்தரங்கள் அல்ல.......

மகிழ்வின்

முதல் தொடக்கங்கள் அவை தான்.........


இருமைகள்தான்வெளிச்சத்தை விளம்பரபடுத்துகின்றன........

இரவுகள் தான் விடியலை தருகின்றன...............


சேற்றிலிருந்து தான்செந்தாமரைகள் பிறக்கின்றன.......

கருமைதான் வெண்மையை தெளிவாகக் காட்டுகின்றன.........


உறுதிகள் மனதில் இருக்கும் வரை

விடியும் நாள் தூரம் இல்லை......


இதயம் இங்கே இருக்கும் வரை

இருள் விலகும் நாள்

தொலைவில் இல்லை.........


இங்கே,

வீழ்வதெல்லாம் தோல்விகளல்ல

எழுவதற்கான

முதல் வழிகள் அவைதான்......


இர.குமார்.

1 comment:

Anonymous said...
This comment has been removed by the author.