Saturday, June 14, 2008

அழகாய் ஒரு உலகம்

அருகம்புல்லில் அழகாய்
சில பனித்துளிகள் அதிகாலையில்.....................

சிலிர்ப்பாய் என் மேல்
சிலகாலை நேரத்து சாரல்கள்...........

படபடப்பாய் சில வண்ணத்துப்பூச்சிகள்
என் வழியில்........

வழிமறித்து நின்ற
என்னை வருடியே
சென்றன சிறகடிப்போடு..........

வானத்தில் சில நிறக்கோடுகள்
வானவில் ஜாலங்கள்
எங்கும் வண்ணம் நிரம்பி........

பூக்கள் சில
என்னை நோக்கி
மணத்தோடு நகைத்தன......

வண்டுகள் சில
காதில் இசைத்தன........

மூங்கில் காடுகள்
காற்றில் கீதம் இசைத்தன........

மரங்கள் பசுமையாய்
அருகேஅழைத்தன......

காற்றின் இதமான வருடலோடு
மனம் இரம்மியமானது.......

அழகாய் தான்
இருக்கிறது உலகம்.........

மனம் எங்கும்
ரசனையை தூவி
விழி விரித்து
இதயம் திறந்து
பார்க்கும் போதெல்லாம்...............


இர.குமார்.


நாங்கள் தமிழர்கள்-உரக்க சொல்வோம் உலகுக்கு


நாங்கள் தமிழர்கள்-
உரக்க சொல்வோம் உலகுக்கு .......
நாங்கள் புவியின்
பண்டை புதல்வர்கள்......
தமிழ் எங்களின் மூச்சு
மறம் எங்களின் நாடி...........
பண்பு எங்களின் உயிர்
விருந்தோம்பல் எங்களின் துடிப்பு.......
விதிகளை விடுத்து
மதிகளை கொண்டு
உலகம் வெல்கிறோம்......
தடை எங்கும்
இல்லை எங்களுக்கு......
மடை திறந்து
புவி எங்கும் நாங்கள்,
எங்கள் புகழை பரப்பி.............
மனம் கொண்டு நாங்கள்
திறம் கொண்டு இங்கே.......
வான் கொள்ள நாங்கள்
வாள் எடுத்து இங்கே......
எங்கள் பெயர்தமிழர்கள்...............
யுகத்தின் முதல்வர்கள்........
புவியின்பண்டை புதல்வர்கள்..........

இர.குமார்.

வெற்றியின் உலகம்

விற்களிலே நாணேற்றி
அம்புகளை தொடுத்தார்கள்
மன்னவர்கள் எங்களின் முன்னவர்கள்.

நாங்களும் தான் தொடுக்கிறோம்
எங்கள் முயற்சி கணைகளை
உழைப்பையே நாணாக்கி.........

இலக்குகள் தூரமில்லை
இங்கே இதயம் இருந்தால்............

விதிகளும் இல்லை
இங்கே மனம் இருந்தால்.............

விதிகளின் வழிகளில்
எங்களை தொலைத்தவர்கள்
இல்லை நாங்கள்.......

மதிகளில் விழி வைத்து
எங்கள் பாதைகளை தேடுகிறோம்..............

வெற்றிகளை மட்டுமே
பரிசாக கொண்டு
ஒரு உலகம்
எங்களுக்காக காத்திருக்கிறது........

தொலைவுகள் தூரமில்லை.......
தடைகளும் இங்கில்லை.........

இதயம் உண்டு இங்கே.......
ஒரு உலகம் உண்டு இங்கே...........



இர.குமார்

வாழ்க்கை

நொடிகளின் மறைவுகளில்
காலம் தன் எல்லைகளை நகர்த்துகிறது........

அனைவருக்கும் வாழ்க்கை
பெரிய கனவுகளோடு தான் தொடங்ககுகிறது......

வாழ்க்கை சுழற்றுகின்ற சுழற்ச்சியில்
எங்கோ தூக்கி எறியப்படுகிறொம்.......

கிடைத்த இடத்தை
நிலைப்படுத்தி கொள்ளவெ
கழிகின்றன எஞ்சிய காலங்கள்........

கண்ட கனவுகள் யாவும்
கண்களுக்கு எட்டுகின்ற
நிஜங்களாய் மட்டுமே ......

கைகளுக்கு என்றும்
சற்று தள்ளியே......

வாழ்க்கை காகிதங்கள்
சூழ்நிலை காற்றால்
சில நேரம் சிறகடித்து பறக்கின்றன............

சூழ்நிலை தாக்கங்களால்
சில நேரம் சிறகடிக்க படுகிறோம்...

பறக்கத்தான் சிறகுகள் இல்லை
நடக்க என்றும் கால்கள் உண்டு
லட்சியங்களை நோக்கி........

காலத்தின் நியதிகளை
மாற்றும் உரிமை
இங்கு எவருக்கும் இல்லை....

மாற்றங்களில் அடங்கியது தான்
மனித வாழ்க்கை....

இதை உணர்ந்த எவரும்
இந்த உலகத்தில்
வருந்தியதும் இல்லை...

இதை உணர மறுத்து
வருந்திய எவரும்
உயர்ந்ததும் இல்லை........

இர.குமார்.



Friday, June 13, 2008

வாழ்க்கையின் அர்த்தங்கள்........

அழகான அர்த்தங்கள் சில இங்கே
வாழ்க்கையை செம்மைபடுத்துகின்றன.......

அர்த்தமில்லா வாழ்க்கை
பாதையில்லா பயணத்தை
போல வெறிச்சொடுகிறது......

மனிதர்களை பொறுத்தே
அர்த்தங்கள்
இங்கு மாறுபடுகின்றன........

நல்ல அர்த்தங்கள்
வாழ்க்கையின் மரங்களுக்கு
நீர் ஊற்றகின்றன...........

தவறான அர்த்தங்கள்
வாழ்க்கையின் பாதைகளில்
முட்களை நிரப்புகின்றன..........

அர்த்தங்கள் வாழ்க்கையின்
பயணங்களை
சுகமோ சுமையகவோ மாற்றுகின்றன..........

மிகச் சிறந்த அர்த்தங்களால்
வாழ்க்கையை
வளப்படுத்திக் கொள்ளுங்கள்........

அவை,
மதிகளின் விழிகளை திறக்கிறது......
சொர்க்கத்தின் கதவுகளை தட்டுகிறது.........

இர.குமார்.

Friday, May 2, 2008

நிதர்சன யுத்தம்.......


வாழ்க்கையின் களங்களில்

நாளும் சில யுத்தங்கள்நிதர்சனகளில்.

நித்தம் சில வெற்றிகள்......

நித்தம் சில தோல்விகள்......


யுத்த களங்களின் வெளி நின்று

பார்க்க மட்டுமே விரும்புகின்றவர்

இங்கு மிக பலர்.

வெற்றியின் சிறகுகளை மட்டுமே

அணிய துணிந்தவர்கள் இவர்கள்.


தோல்விகளையும் ,விழுபுண்களையும்

ஒரு பொழுதும் விரும்பாதவர்கள்.....


நெஞ்சின் உரம் கொண்டு

களங்களின் உள் செல்பவர் மிக சிலர்.....

அங்கே வெற்றியை பெறுபவர் மிக சிலர்...

விழுபுண்களை பெற்று மாள்பவர் ஒரு சிலர்.......


மனதின் வலிமை அறிந்து

தங்களின் திறங்களை அறிந்து உள்செல்பவர்கள்

என்றும் வெல்கிறார்கள்......

விதைகளாய் தங்களையே ஊன்றி

விருட்சமாய் வான் நோக்கி உயர்கிறார்கள்...


வன்மைகள் பல புதிதாய் பெற்று

விந்தைகள் பல புதிதாய் செய்கிறார்கள்........

காலம் உள்ளவும்

தங்கள் முகவரிகளை நிலைநிறுத்துகிறார்கள்......


களங்களின் வெளி நிற்கும் கூட்டமோ

பார்த்து கொண்டு மட்டுமே நிற்கிறது

இவற்றை தொடவேமுடியாத எல்லைகள்

என்று மட்டுமே எண்ணி.............


இர.குமார்.

வீழ்வதெல்லாம் தோல்விகள் அல்ல......


வீழ்வதெல்லாம் தோல்விகள் அல்ல......

எழுவதற்கான முதல் வழிகள் அவைதான்........


தோல்விகளெல்லாம் துயரங்கள் அல்ல

வெற்றியின் முதல் விளிம்புகள் அவைதான்......


துயரங்கள் எல்லாம் நிரந்தரங்கள் அல்ல.......

மகிழ்வின்

முதல் தொடக்கங்கள் அவை தான்.........


இருமைகள்தான்வெளிச்சத்தை விளம்பரபடுத்துகின்றன........

இரவுகள் தான் விடியலை தருகின்றன...............


சேற்றிலிருந்து தான்செந்தாமரைகள் பிறக்கின்றன.......

கருமைதான் வெண்மையை தெளிவாகக் காட்டுகின்றன.........


உறுதிகள் மனதில் இருக்கும் வரை

விடியும் நாள் தூரம் இல்லை......


இதயம் இங்கே இருக்கும் வரை

இருள் விலகும் நாள்

தொலைவில் இல்லை.........


இங்கே,

வீழ்வதெல்லாம் தோல்விகளல்ல

எழுவதற்கான

முதல் வழிகள் அவைதான்......


இர.குமார்.

மாயமான் வேட்டை.......


அம்புகளின் தொடுப்பில்

சலசலத்தன சில பூக்கள்.....

மான்கள் பல ஓடின.....

அதை தொடர்ந்து

சில வேட்டைகளும் தொட்ங்கின......

பெண்,பொன்,மண்

மனம்,பணம்

மான்கள் பல

இங்கே இந்த புவியில்.....


வேடர்கள் பல......

வேட்டைகள் பல.....

எப்பொழுதும் துரத்தல்கள் இங்கே........

தேடுதல்களின் வேகம்

எப்பொழுதும் தீவிரமாய்......


வாழ்க்கை

ஒரு மாய மான் வேட்டை....

இங்கே வேட்டைகள்

மட்டும் தொடரும்....

மான்கள்

எப்பொழுதும் மாயமாய்...............

ஜன்னலை திறங்கள் காற்று வரட்டும்.........


மனதை சிறை வைப்பவர்கள்

என்றும் மகிழ்வதில்லைஇங்கே.............

உங்கள் மனச் சாளாரங்களைஎன்றும்

அகலத் திறந்துவைக்க முயலுங்கள்.........

அங்கே காற்று வரட்டும்........

மடல்கள் திறந்தே பின்னே

தெரியும் பூக்கள் போல........

மனம் திறந்த பின்னே

இதயம் இங்குசிறகு விரிக்கும்........

சில வண்ணத்துப் பூச்சிகள் படபடக்கும்.............

சில மின்மினிப் பூச்சிகள்

வெளிச்சம் தெளிக்கும்..........

மகிழம் பூக்கள் மடல்கள்

திறந்தே மனம் வீசும்..........

வானம் இன்றியே

வானவில் நிறம் காட்டும்.........

இறுகிய மனம் எப்பொழுதும்

இருளை மட்டுமே ஈர்க்கும்........

இள்கிய மனம்

என்றும்இதயம் கவரும்........


உங்கள் ஜன்னல்களைதிறந்து வையுங்கள்..........

அங்கே காற்று வரட்டும்.......


உவகைகள் நிரம்ப........

உள்ளம் பொங்க........

என்றும் மகிழ்ச்சிவெள்ளம் பாயட்டும்............


இர.குமார்.


புதிதாய் மீண்டும் பிறப்போம்.........


புதிதாய் மீண்டும் பிறப்போம்.........
இறந்த நொடிகளை மறந்து
இருக்கும் புதிய நொடிகளுக்குள் நுழைவோம்..............
விதியின் வரைமுறைகள் தாண்டி
புதிய வரம்புகள் தொட
என்றும் முயற்சி செய்வோம்.........
வல்லமைகள் பல புதிதாய் பெறுவோம்.....
விந்தைகள் பல
இந்த புவியில் புதிதாய் செய்வோம்..........
உழைப்பையே உரமாக்கி
நம் முயற்சி விதைகளை
இந்த பூமியில் தூவுவோம்.............
இமயமே இலக்காய்........
விடியலே நோக்காய்
எழுந்து நின்று போராடுவோம்..........
இந்த உலகம் உள்ளளவும்
நம் முகவரி இப்புவியில்
நிலைத்திருக்க முயற்சி செய்வோம்.........
புதிதாய் மீண்டும்
நாம் இங்கு பிறப்போம்.
இர.குமார்.

Thursday, May 1, 2008

இது என் கவிதை தோட்டம்




எழுத்துக்களை கோர்த்து சொற்களை படைத்தேன்


சொற்களை விதைத்து கவிதை அறுத்தேன்


எண்ணங்களை மழையாக்கி என் உள்ளத்தை தெளித்தேன்


என் மனதினை ஊற்றி கவி பூக்கள் பறித்தேன்


என் கற்பனை கொண்டு கிளைகள் விரித்தேன்


என் மகிழ்ச்சியை கொண்டு சில கூடுகள் செய்தேன்


சில பறவைகள் அங்கே இளைபாற கண்டேன்


வாருங்கள் தோழர்களே ..........




இது என் கவிதை தோட்டம் ........



இங்கே இளைப்பாற வாருங்கள்........



இர.குமார்.